முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையினரும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு அலுவலராக இருந்து பணியாற்றுவது வேறு, நீங்கள் அனைவரும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தன்னார்வலராக அரசு மருத்துவமனைகளிலும், மாவட்ட கட்டுபாட்டு அறையிலும், மேலும் பல்வேறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க உதவிகளையும் செய்துள்ளீர்கள். உங்களது பணி மிகவும் பாராட்ட தக்கதாக இருந்தது. மக்களை பாதுகாக்கின்ற இந்த பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டது மிகவும் பாராட்டக்குரியது. உங்கள் பணி சமுதாய பங்களிப்புடன் இருந்ததால்தான் நாம் கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. உங்களின் பங்களிப்பால்தான் கொரோனா கட்டுக்குள் வந்தது. 

நமது மாவட்டத்தில் கொரோனா குறைந்துள்ளது. கொரோனா இல்லையென நாம் இருந்துவிடக்கூடாது. கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். மாவட்ட நிர்வாகத்துடன் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களும் ஒன்றுசேர்ந்து பாதுகாப்புடன், விழிப்புடன் இருந்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். அடுத்ததாக 3வது அலை வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மக்களை காக்கின்ற பணியை மேற்கொள்வோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி திருமதி.செலின்ஜார்ஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.இளையராஜா, பேரிடர் வட்டாட்சியர் திரு.சசிகுமார் மற்றும் அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்