தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ரா ஜ் இ.ஆ.ப.இ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
--------------------
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப.இ அவர்கள் இன்று (14.07.2021) நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம் காமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உளுந்துஇ பாசி பயறு சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணிகள் மற்றும் பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள்இ செக் நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய் , சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்பெனியில் உள்ள விவசாயிகளுக்கு விதை/ உரம்இ பூச்சி மருந்து உள்ளிட்ட தேவைகள் குறைந்த விலையில் தரமான அளவில் கம்பெனி மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பாடுகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு இதுகுறித்து அலுவலர்கள் மற்றும் விவசாய உறுப்பினர்கள் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் , துணை இயக்குநர் வேளாண் வணிகம் திருமதி.சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பழனிவேலாயுதம் நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் திரு.சுரேஷ்ராமலிங்கம்இ விளாத்திகுளம் வட்டாட்சியர் திரு.ரகுபதி, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலர் திரு.பாலமுருகன் , உழவர்களின் கூட்டு நிறுவன தலைவர் திரு.சந்திரன் உதவி தலைவர் திரு.ஓவலசு பெருமாள் உறுப்பினர் திருமதி.லதா நிறுவன மேலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக