முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ரா ஜ் இ.ஆ.ப.இ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

--------------------

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் இன்று (14.07.2021)  நேரில் சென்று ஆய்வு செய்தார். 

விளாத்திகுளம் காமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உளுந்துஇ பாசி பயறு  சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணிகள் மற்றும் பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள்இ செக் நல்லெண்ணெய் ,  கடலை எண்ணெய் ,  தேங்காய் எண்ணெய் ,  சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கம்பெனியில் உள்ள விவசாயிகளுக்கு விதை/   உரம்இ பூச்சி மருந்து உள்ளிட்ட தேவைகள் குறைந்த விலையில் தரமான அளவில் கம்பெனி மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.                                                                                                                                                

       
           

                                                      காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பாடுகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு இதுகுறித்து அலுவலர்கள் மற்றும் விவசாய உறுப்பினர்கள் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் , துணை இயக்குநர் வேளாண் வணிகம் திருமதி.சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.பழனிவேலாயுதம்  நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் திரு.சுரேஷ்ராமலிங்கம்இ விளாத்திகுளம் வட்டாட்சியர் திரு.ரகுபதி, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலர் திரு.பாலமுருகன் ,  உழவர்களின் கூட்டு நிறுவன தலைவர் திரு.சந்திரன் உதவி தலைவர் திரு.ஓவலசு பெருமாள்  உறுப்பினர் திருமதி.லதா நிறுவன மேலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள்,  விவசாயிகள் கலந்துகொண்டனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்