நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு
தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து கடந்த 23- 07-2021 வெள்ளி கிழமை அன்று தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், மாநில கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர் . போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் பரிசு வழங்கி வாழ்தினார். இதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பார்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசி; மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன்னை பாராட்டினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக