மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

மகளிர் தினத்தில் மகளிருக்கான சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

   


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வருவாய் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 25 முதல் 35 சதவிகிதம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களை தமிழக அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கி வருகிறது.


படித்த வேலைவாயப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ,  (PMEGP)  புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில நிறுவன மேம்பாட்டுத் திட்டம்   (NEEDS)  மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  (PMEGP)   ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடன் பெற்று சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.


 இம்மூன்று திட்டங்களிலும் மகளிருக்கு 50சதவிகித ஒதுக்கீடு செய்யப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கான அழகு நிலையம், ஜவுளி வியாபாரம், தையல் தொழில், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உடற்பயிற்சி நிலையங்கள், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், மசாலா பொருட்கள் தயாரித்தல், பேக்கரி தொழில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுதல், சங்கு மற்றும் சிப்பிகளிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்தல், பேன்ஸி ஸ்டோர், பலசரக்கு கடை, கம்ப்யூட்டர் சென்டர், மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, போன்ற தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற 08.03.2022 அன்று தூத்துக்குடி, பைபாஸ் ரோடு அருகில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் காலை 11.00மணி முதல் மாலை 5.00 மணி வரை சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மகளிருக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ரூ.50000/- முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / பெறாத, மற்றும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட / 45 வயதிற்கு மேற்பட்ட, அனைத்து மகளிரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் பெற மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்;; தெரிவித்துள்ளார்


 


கருத்துகள்