பொதுவாக நாம், நம்மில் எத்தனை பேர் எதற்கும் அஞ்சாதவர்களாய்.. இருந்தாலும், மின்சாரம் என்றால் - அதிக கவணமும்.. முன் எச்சரிக்கை கலந்த பயமும் நமக்கு வருவது இயல்பு. ஆனால் நம் வீடுகளில் நாம் பயன்படுத்தப்படும் மின்சார உபகரணங்களுக்கான மின் இணைப்புக்களை சரியாண முறையிலும், பாதுகாப்பான வகையிலும், நிரந்தரமான இணைப்பு, மற்றும் தற்காலிக இணைப்பு எதுவாக இருந்தாலும் வயரிங் செய்வதில் இரு வயர்கள் இணைக்கும் போது பேஸ் மற்றும் நியுட்ரல் வயர்கள் ஓன்றை ஒன்று தொடாமல் இருக்க இன்சுலேஷன் டேப் கொண்டு ஒட்டி எலக்ட்ரிக் ஷாக் ஏற்படாதவாறு கவணமாக செயல்படுகிறோம். அதே வேலையில் நமது - அல்லது நமது உறவின் க்கள் - நண்பர்கள் நடத்துகின்ற சுபகாரியங்கள், பிற நிகழ்ச்சிகள் எதுவாயிலும் லாடகை மண்டபங்களை பயன்படுத்துகிறோம். இந்த மண்டபங்களில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் டெக்கரேஷன் அமைப்பாளர்களால் மணமேடையில் அமைக்கப்படும் வண்ண மின் விளக்குகள் - பேன் - ஏர்கூளர் - போன்ற மின் உபகர்ணங்களின் மின்இணைப்பு தற்காலிகமாக குண்டுசி - ஊக்கு போன்றவைகளால் சப்ளை வயரில் குத்தப்பட்டு அல்லது வயர்களை வயரோடு முறுக்கி விடபட்டு இன்சுலேஷன் டேப் சுற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் சில சமயங்களில் கவணக் குறைவாக இன்சுலேஷன் டேப் ஒட்டப்படாமலோ -இருப்பதை நாம், காண முடிகிறது. இதனால் குழந்தைகள் - பெரியவர்கள் - சப்ளை வயர்களை தொட்டுவிடவோ- மிதித்து விட கூடும் ஆகவே நிகழ்ச்சி நடத்துபவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பது அவசியமாகும். முக்கியமானதாகும்.. விபரீதம் நடை பெறாமல் காப்பதும், தடுப்பதும் நமது கடமையாரும் . " நமது எழுத்தாணி "