முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாள் தேசிய கருத்தரங்கு தூத்துக்குடி மாவட்ட SP. பங்கேற்பு


 தூத்துக்குடி மாவட்டம் :      
    சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்றது. 

                  இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்டு, இளைஞர் பாதுகாப்புச்சட்டம்  மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்  குறித்து சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, அவ்வலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்பட்சத்தில் ‘சைல்டு ஹெல்ப் லைன்  இலவச அழைப்பு எண். 1098க்கு தகவல் கொடுத்தால் உடனடியாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்திய தண்டனைச்சட்டப்படி 7 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த ஒரு தவறு செய்திருந்தாலும் அது குற்றமாக கருத இயலாது.  2000ம் ஆண்டில் இளைஞர் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. பின் 7 வயதுக்கு மேல் 18 வயது வரையுள்ளவர்கள் தவறு செய்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. சிறிய தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. பெரிய குற்றங்களை செய்தவர்களை கூட காவல் நிலையத்திற்கு கூட்டிச்செல்லுதல், நீதி மன்றத்திற்கு அழைத்துச்செல்லுதல், மற்றவர்களை அடைக்கும் சிறையில் அடைத்தல் போன்றவை கிடையாது. அவர்களுக்கென 3 உறுப்பினர்கள் கொண்ட ‘ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு’  தான் ஆஜர்படுத்தப்படுவார்கள். 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்படி உதாரணத்திற்கு 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை, 18 வயதுக்கு மேல் உள்ள ஒரு ஆண், அவள் சம்மதத்துடன்   பாலியல் ரீதியான தொடர்பு கொண்டாலும் அது போக்சோ சட்டத்தின்படி அந்த ஆண் குற்றம் செய்தவரென அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர் பாதுகாப்புச்சட்டம் பற்றி விரிவுரையாற்றினார். பின் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் சந்தேகங்கள் உள்ளதா என்று கேட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இக்கருத்தரங்கில் காமராஜ் கல்லூரி இயக்குநர் டோனி மெல்வின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், கல்லூரி முதல்வர் நாகராஜன், பேராசிரியர் பியூலா, டாக்டர் செய்யது உமர்காதாப் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...