முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துப்புரவு பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி பணி மற்றும் துப்புரவு பணியாளர் நலன் குறித்த ஆய்வுக்கூட்டம் தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

                         தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதி மற்றும் பணியாளர்கள் நல வாழ்வு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஷிர்மணி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.இது இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் திட்ட மதிப்பீடு அவற்றின் நிலை ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது மேலும் மாவட்டத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் புதுவாழ்வு திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துணை ஆட்சியர் சிம்ரன் சிங் மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...