முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி ஹாக்கி போட்டியில் சாம்பியன் ஷிப்

அகில இந்திய ஹாக்கி: பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன் 
  கோவில்பட்டி, மே 27:
  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியுடன் இணைந்து கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் அகில இந்திய ஹாக்கிப் போட்டி நடைபெற்று வந்தது. 
      இப்போட்டியில் 16  அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில், 14ஆவது நிமிடத்தில் பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணி வீரர் முகமது ரஹீல் மௌசின் ஒரு கோல் அடித்தார். 18ஆவது நிமிடத்தில் அதே அணி வீரர் குஷா ஜெபி கௌடா ஒரு கோல் அடித்தார். 29ஆவது நிமிடத்தில், செகந்திராபாத் அணி வீரர் இன்னோசெண்ட் குல்லு பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 33ஆவது நிமிடத்தில் பெங்களூர் அணி வீரர் குஷா ஜெபி கௌடா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 
      தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில், 54ஆவது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ரஞ்சன் ஐயப்பா ஒரு கோல் அடித்தார். 58  மற்றும் 60ஆவது நிமிடத்தில் பெங்களூர் அணி வீரர்கள் ஆஞ்சநேயா அம்பிகரா மற்றும் குஷா ஜெபி கௌடா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 
ஆட்ட நேர முடிவில் 5-க்கு 2  என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. 
முன்னதாக நடைபெற்ற மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான போட்டியில் 5க்கு 2  என்ற கோல் கணக்கில், சென்னை ஐ.சி.எப். அணி மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியை வீழ்த்தியது. 
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். முதல் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையை பெங்களூர் ஹாக்கி அசோஸியேஷன் அணியும், 2ஆவது பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், 3ஆம் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை சென்னை ஐ.சி.எப். அணியும், 4ஆம் பரிசான ரூ.30 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியும் பெற்றன. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...