தூத்துக்குடி அருகே உள்ள மகா சிமெண்ட் ஆலையில் விபத்துக்குள்ளாகி பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூர் கிராம பகுதியில் மகா சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நெல்லை மாவட்டம் சங்கனாபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அருணாச்சலம் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஆலையில் 57 அடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்து படுகாயம் அடைந்துள்ளதாக கூறி அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன அருணாச்சலம் என்பவர் ஆலையின் வரித்துறை நிர்வாகத்தில் மேலாளராக உள்ளார். அலுவலக பணியாளராக இருக்ககூடிய இவர் விபத்தில் சிக்கியுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஆலையில் ஒரு அலுவலக பணியாளர் விபத்துக்குள்ளாகி இறக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகளோடு ஆலை இயங்குகிறதா? இவ்வாறு பாதுகாப்பு குறைப்போடு ஆலை இயக்கப்படுவது எப்படி?என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நல பாதுகாப்பு துறை உரிய சோதனைகள் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக