முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அருகே ஆலையில விபத்து- ஓருவர்பலி

     தூத்துக்குடி அருகே  உள்ள மகா சிமெண்ட் ஆலையில் விபத்துக்குள்ளாகி பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

      தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூர் கிராம பகுதியில் மகா சிமெண்ட் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நெல்லை மாவட்டம் சங்கனாபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அருணாச்சலம் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஆலையில் 57 அடி உயரத்தில் இருந்து தவறிவிழுந்து படுகாயம் அடைந்துள்ளதாக கூறி அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இறந்து போன அருணாச்சலம் என்பவர் ஆலையின் வரித்துறை நிர்வாகத்தில் மேலாளராக உள்ளார். அலுவலக பணியாளராக இருக்ககூடிய இவர் விபத்தில் சிக்கியுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
         மேலும் ஆலையில் ஒரு அலுவலக பணியாளர் விபத்துக்குள்ளாகி இறக்கும் அளவிற்கு பாதுகாப்பு குறைபாடுகளோடு ஆலை இயங்குகிறதா? இவ்வாறு பாதுகாப்பு குறைப்போடு ஆலை இயக்கப்படுவது எப்படி?என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் நல பாதுகாப்பு துறை உரிய சோதனைகள் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...