ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 150வது பிறந்ந நாள் விழா கொண்டாடும் விதமாக தூத்துக்குடி பரதர் நல சங்கம் சார்பாக 13-11-2019 புதன் கிழமை மாலை பத்திரிககையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது
தூத்துக்குடி மாநகரம் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சிகளை கண்டு வந்திருக்கிறது என்றால்...தூத்துக்குடி வளர்ச்சியை நூறாண்டுகளுக்கு முன்பாக தொலைநோககு மற்றும் தியாக சிந்தனையோடு தனது அர்பணிப்பால் செயலாற்றியவர் தான்
மரியாதைக்குறிய தூத்துக்குடிமாநகர தந்தை ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்; இவர் தனது சொந்த முயற்சியில்
வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டுவந்து நமது தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் கோமான் அன்னரின் 150 வது
பிறந்தநாள் வருகின்ற நவ்வம்பர் 15ம் தேதி ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்படுவதாகவும் 16 ம் தேதி தூத்துக்குடி பரிசுத்த பனிமய மாதா பேராலயத்திற்கு அருகில் உள்ள “ஸ்னோ ஹாலில் வைத்து கொண்டாட உள்ளது
இந்த விழாவில உயர்திரு J.P,L பொனோ வென்சர் ரோச் அவர்கள் தலைமையில் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் புகழ் பரப்பும் வண்ணம் உள் அரங்க பொது கூட்டமும், 150வது பிறந்த நாள் சிறப்பு மலரும் வெளியிட இருப்பதாகவும். மேலும் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் நினைவாக தமிழக அரசு மணிமன்டபம் அமைத்து அவரின பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக பரதர் நல சங்க அவைத்லைவர் திரு.ஞாயம் ரொமாலட் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பரதர் நலசங்க தலைவர் ஐானசன், பொதுசெயலாளர் கனகராஐ—பொருளாளர் பியோ கர்டோசா,துணைத்தலைவர் ஐானசன், கல் மோத்தா.,ராயப்பன் இருதயராஐ, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.