முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திறந்த நிலையில் இருக்கும் குடி நீர் வால்வு தொட்டி '

  தூத்துக்குடி
அமுதாநகர், கிருபைநகர் நடுரோட்டில் மூடி இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கும் குடிநீர் வால்வு தொட்டிகளால் உயிருக்கு ஆபத்து
      தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா ?
           திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வருகிறது
           இந்நிலையில. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் வால்வு தொட்டிகள் மூடி இல்லாமலும், சேதமடைந்தும் காணப்படுகின்றன இவற்றில் பல, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலான தொட்டிகளில் மேல்மூடி இல்லாத நிலையிலேயே கிடக்கிறது. மேலும் பல தொட்டிகள் உடைந்தும், சேதமடைந்தும் பாதுகாப்பற்ற நிலையில் கிடக்கிறது.
          குறிப்பாக தெற்கு மண்டலத்தில் உள்ள, அமுதாநகர் 3வது தெருவில் (கிருபைநாதர் ஆலயத்திற்கு பின்புறம்) 2 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் வால்வு தொட்டி, மேல்மூடியே இல்லாமல், திறந்த நிலையில் கிடக்கிறது. சாலையின் நடுவிலும், முக்கிய திருப்பத்திலும் இத்தொட்டி அமைந்து உள்ளதால், அப்பகுதியில் உள்ளவர்கள் இவ்வழியே வாகனங்களில் செல்லும் போது, ஒரு பக்கமாக விலகியே செல்கின்றனர். அதே நேரத்தில் வெளியூரை சேர்ந்த பலர் இத்தொட்டியில் தவறி விழுந்து காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
         மேலும் அதனை அடுத்துள்ள கிருபைநகரில் இருந்து, 3வது மைல் பகுதிக்கு திரும்பும் முக்கிய சாலையின் நடுவில் உள்ள குடிநீர் வால்வு தொட்டியின் மேல்மூடி, சரியாக அமைக்காமல், அரைகுறையாகவே கிடக்கிறது. இந்த தொட்டியால் பலர் தடுக்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
          இந்த குடிநீர் வால்வு தொட்டிகள் அமைந்திருப்பது, குடியிருப்பு பகுதி என்பதாலும், குழந்தைகள்அதிகம் நடமாடும் பகுதி என்பதாலும், இப்பிரச்சனையில் தனி கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
மேலும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த தொட்டிகளால் தடுக்கியோ, தவறியோ விழுந்து  உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
          எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், மேற்படி குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு, சரியான அளவிலான மேல்மூடிகளை பொருத்திட மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...