இந்த உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரோணா வைரஸ் தொற்று நம் இந்திய தேசத்தின் பல பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும் பரவி வருகின்றது என்பதை நாம் அறிவோம் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும் காத்து நம்மை சார்ந்தவர்களையும் காப்பாற்றும் முயற்சியில் நமது மத்திய அரசும் , மாநில அரசு வைரஸ் தொற்றின தன்மையை அறிந்து அதிவிரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இந்த நடவடிக்கைகளில் ... அந்தந்த மாவட்ட ஆட்சியர் கண் காணிப்பில் மருத்துவதுறை , சார்ந்த மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் ,காவல் துறையினர் , வருவாய் துறையினர். , தீ யனைப்பு , நகராட்சி மாநகராட்சி சுகாதார துறையினர் / செவிலியர்கள் , மருத்துவ மனை உதவியாளர்கள் - ஆம்புலன்ஸ் சேவை வாகன பணியாளர்கள், இவர்களோடு ஊடகம் _ மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் என இவர்கள் யாவரும் பசி, தூக்கம் பொறுப்படுத்தாமல் - தன் குடும்பங் களைவிட்டு வைரஸ் தொற்று வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணி ப்பு தன்மை யோடு சிகிச்சை அளிப்பதில் மனிதாவிமானத்தோடும் ,. சமுக பொறுப்புணர் வேர்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது . இப்படி நமக்காக நம்மை போன்ற வர்களுக்காக பாடுபடும் இவர்களுக்கு நாம் எந்த வகையில் உதவியாக இருப்போம் , இந்த வைரஸ் தொற்றுவை தடுப்பதில் நமது ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன? முதலாவது அரசு மற்றும் மருத்துவர்கள் வலியுறித்தி சொல்லு கின்றவைகள பின்பற்றுவதில் கவன குறைவோ அல்லது அலட்சிய போக்கு இருத்தல் கூடாது. சுய நலம் கருதியோ அல்லது பொது நலம் கருதியோ வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வருவதை தவிர்த்து வந்தாலே கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தவிர் கலாம் பொதுமக்கள் தங்கள் அத்தியா வசியமான பொருள்கள், காய்கறிகள் வாங்குவதற்கு கொடுக்கப்பட்டுள்ள நேர அவகாசத்திற்குள் பொதுமக்கள் கடை களுக்கு மாஸ்க் அணிந்து வரவேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள சமூக இடை வெளியை பின்பற்றுவதோடு... கண்டிப்பாக குழந்தைகளையும் _ முதியவர்களையும் வீட்டை விட்டு வெளி வராமல் கவனித் கொள்வது அவசியம் மேலும் கைகளை கைகழுவும் திரவம் கொண்டு அவ்வப்போது கை கழுவும் முறையை பின்பற்றி கைகளை கழுவுதல் வேண்டும் என மருத்துவத் துறையால் அறிவுத்தியதை அலட்சியம் இல்லாமல் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் . கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டால் மருத்துவர்கள் மற்றும் அரசு வழிகாட்டல் படி அதற்கான இலவச எண் ஐ தொடர்பு கொண்டு தங்களை சிகிச்சைக்கு உட் படுத்திக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும் . காவல் துறையினருக்கு தேவை யற்ற சிரமத்தை கொடுப்பதை தவிர்க்க 144 தடை உத்தரவின் போது நாம் இரு சக்கர வாகனங்களில் தேவை யில்லாமல் ஊரை வலம் வருவதை தவிர்த்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நடந்து கொள்ளலாம் ஆகவே நாம் அனைவரும் சமூக நல் சிந்தனையோடு ஒவ்வருவரின் நலனின் அக்கரை உள்ளவர்களாய். பொறுப்புள்ளவர்களாய் நடந்து கொள்வது அதி முக்கியமானது . இப்படிக்கு : Eசிவகாமிநாதன்

கருத்துகள்
கருத்துரையிடுக