தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வெனி மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

தூத்துக்குடி மாவட்டத் தில் தனியார் (SETC )பணிபுரிந்து வநத
பீகார் மாநிலத்தை சேர்ந்த 263 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு செல்லதிருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 10 சிறப்பு பேருந்துகளில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.05.2020) வழிஅனுப்பி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:
தூத்துக்குடிமாவட்டத்தில்கொரோனா வைரஸ் நோய் தொற்றால் 33 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு நபர்சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 6 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேர் சென்னை
கோயம்பேடு மார்கெட் பகுதியில்இருந்து வந்தவர்கள். மற்ற 4 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுஅவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன்தொடர்பில்இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8700 தொழிலாளர்கள்பல்வேறு இடங்களில் இருக்கின்றனர். குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு
வங்கம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு முதல்கட்டமாக திருநெல்வேலியில்
இருந்து பீகார் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் செல்கிறது. இந்த ரயில் திருநெல்வேலி ஜங்சன் ரயில்
நிலையத்தில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படுகிறது. நமது மாவட்டத்தில் இருந்து
ளுநுவுஊ தொழிலாளர்கள் 263 பேர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு
தேவையான உணவு வசதி, ரயில் டிக்கெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகஅவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 140 தொழிலாளர்கள்அவர்களது சொந்த மாநிலத்திற்கு நாளை செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் செல்வதற்கு ரயில் நாளை புறப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில்
உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த 8700 தொழிலாளர்களில் 4170 நபர்கள் சொந்த
மாநிலத்திற்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இவர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி, வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது என.தெரிவித்தார் , தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் சொந்த மாநிலத்திற்கு செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்;ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வட்டாட்சியர்
திரு.செல்வக்குமார், ளுநுவுஊ நிறுவன துணைத்தலைவர் திரு.ராமமூர்த்தி, பொது மேலாளர்;
திரு.ரமேஷ், துணை பொது மேலாளர் திரு.ராஜேஷ்குமார் சர்மா, மனித வள மேம்பாட்டு மேலாளர் திரு.முருகேசன் மற்றும் காவல் துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள்
கலந்துகொண்டனா
கருத்துகள்
கருத்துரையிடுக