முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: உறவினர்கள் கோரிக்கை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், தமிழக முதல்வருக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புளியம்பட்டி அருகிலுள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் (35). துபாய் நாட்டில் உள்ள RAS AL KHAIMAH என்ற இடத்தில், KHANBOLLI Electro Mechanical Cont LLC எனும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா நோயால் துபாய் நாட்டிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக இளைஞர் வேல்முருகன் தனது சக பணியாளர்களுடன் 10.05.2020 அன்று அவரது நிறுவனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென்று மின்னழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 

மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதனை உறுதி செய்துள்ளனர். இப்போது உடல் துபாயில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். துபாயில் இருக்கும் வேல்முருகன் மனைவி மணிமேகலை தனது கணவரின் உடலைக் கூட பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேல்முருகனின் தந்தை சி.கதிர்வேல் மற்றும் குடும்பத்தினர் தங்கள் மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்.டுமென, தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மூலமாக தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மதிமு,க பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் கொடியன்குளம் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வேல்முருகன் உயிரிழந்த சோகத்தாலும், அவரது, உடலைக் கூட காண முடியாமலும் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...