ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அடுத்த சுமார் 2 வாரங்களுக்கு இந்தியாவில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை நீட்டிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
- பலரும் எதிர்பார்த்திருந்த விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரயில் சேவைகளும் இயங்காது.
- பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
- தற்போது போலவே உணவகங்கள் ஆன்லைன் டெலிவரி சேவைகளை தொடரலாம்.
- சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் திறக்கப்படாது.
- விளையாட்டு அரங்கங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளjது.
கருத்துகள்
கருத்துரையிடுக