பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் : துரித சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்


தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த திரு.சிவக்குமார் என்பவரின் மகன் 13 வயது சிறுவன ; குருகார்த்திக் நேற்றைய தினம் (18.5.2020) அன்று விளையாடிக்கொண்டிருந்த போது கடும் விஷ தன்மையுள்ள கட்டு விரியன் பாம்பினால் கடிக்கபட்டு மிகவும் ஆபத்தான நிலையில்                  தூத்துக்குடிஅரசுமருத்துவகல்லூரிமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். வரும்போது முற்றும் மயங்கிய நிலையில்ணர்வேஇல்லாதநிலையில்ரு இரு ந்தான்.நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் பதிவு செய்ய முடி யாத அளவுக்கு மோசமாக இருந்தான்.                                                                                                                                                                         இதை அறிந்த  மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் உடனடியாக மருத்துவ துறை அவசர பிரிவுக்கு  தொடர்பு கொண்டு அனைத்து வகையானசிகிச்சையும்தாமதமின்றி சிறுவனுக்குகிடைக்கும்படிஉத்தரவிட்டர். அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும்  அவசர சிகிச்;சை பிரிவிலிருந்த மருத்துவர் மற்றும் பணியிலிருந்த செவிலியர் வேகமாக செயல்பட்டு சிறுவனை சுவாச கருவியில் பொருத்தி சுவாசம் சீராக இயங்க கூடிய மருந்துகளை உடனே செலுத்தினர். 10 மணிநேர தீவிர சிகிச்சைக்கு   பின்னர் சிறுவனின் உடல்நிலை தேற ஆரம்பித்தது.இன்று (19.05.2020) காலை சிறுவனுக்கு முழு உணர்வு திரும்பியது நாடிதுடிப்பு இரத்த அழுத்தம் சீரானதுதற்போது (பகல் 2 மணிக்கு) எழுந்துஅமர்ந்துவாய்வழியாகஉணவுஉண்ணும் நிலைக்கு   முன்னேறியுள்ளான்                                                                                                    சிறுவனின் தாயார் மருத்துவ கல்லூரிமுதல்வரின்உடனடிகவனிப்பும்மருத்துவ குழுவின்உழைப்புமே தன்பையனின்உயிர்பிழைக்க காரணம்என கூறி மருத்துவ கல்லூரி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்
                                                                              இன்று  காலை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன அவர்கள் நேரில்  செனறு சிறுவனை பார்த்து நலம் விசாரித்தார். கொடிய பாம்பின் கடியிலிருந்து இவ்வளவு விரைவில்
சிறுவன் குணமானது அரசு மருத்துவ மனையின் ஒரு சாதனையாகும் என மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதி பாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்