முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்காவது கட்ட ஊரடங்கு பிரதமர் மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் மக்கள் பலியாகியுள்ளனர். நாம் கடினமான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. இப்படியொரு நிலைமையை நாம் பார்த்ததே கிடையாது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்.

இந்தியாவில் பிபிஇ சிறப்பு உடைகள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. இன்று 2 லட்சம் பிபிஇ சிறப்பு உடைகள் தயாரிக்கப்படுகின்றன. கரோனாவால் உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவின் மாற்றங்களை உலகமே கவனிக்கிறது. அதேசமயம், நாமும் உலகைக் கவனித்து வருகிறோம். இந்தியாவின் மாற்றங்கள் உலகையே மாற்றியமைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் இந்தியாவின் மருந்துகள் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்தத் தருணத்தில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. மனித குலத்துக்கான பல நன்மைகளை இந்தியா மேலும் செய்யும்.

நிலநடுக்கங்கள் உட்பட பல இன்னல்களை மக்கள் நிறைய பார்த்திருக்கிறார்கள். எனவே, நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும். இந்தியா தனித்தன்மை கொண்ட நாடு.பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் இந்தியாவின் 2 தூண்கள். இந்தியாவின் பலம் நம்முடைய ஜனநாயகம். இங்கு விநியோக அமைப்பு பாதிக்கப்படாது.

பொருளாதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கியின் மூலம் ரூ. 20 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும். இதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றின அறிவிப்புகள் நாளை வெளியிடப்படும்.இந்த சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா நல்ல முன்னேற்றம் பெறும். அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இக்கட்டான சூழ்நிலையில் இது மிகவும் உதவியாக இருக்கும். தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு வரப் பிரசாதமாக அமையும்.அதேசமயம், நாம் உள்நாட்டுப் பொருள்களை வாங்குவதில் கர்வம் கொள்ள வேண்டும். கதர் மற்றும் கைத்தறி வாங்கச் சொன்னபோது வெற்றிகரமாக செய்துகாட்டினீர்கள்.

கரோனா இன்னும் பல மாதங்கள் நம்முடன் இருக்கும். எனவே, எப்போதும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.நான்காவதாக அறிவிக்கப்படவுள்ள பொது முடக்கம் வித்தியாசமாக மாறுபட்டதாக இருக்கும். இதுபற்றின விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.கரோனாவைச் சமாளித்துக்கொண்டே நாமும் முன்னேற வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. உங்கள் குடும்பத்தையும் உங்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்