தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து 713 பயணிகள் வருகை .





தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து இந்திய
கடற்படைக்கு சேர்ந்த INS  JALA S HWA  மூலம் வருகை தந்த தமிழகம்மற்றும்பிற
மாநிலங்களை சேர்ந்த 713 பயணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக
பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்இன்று (02.06.2020) வரவேற்றார்கள். மேலும் பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன்
கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங் பணிகளையும் பார்வையிட்டார்கள்.
மேலும் பேருந்துகளின் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர்
அறையில் மாவட்ட வாரியாக பிரித்து, குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளைசோதனை செய்யும் பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள்
ஆகியவற்றை வழங்கி மீண்டும் பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கும் பணிகளையும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர்
திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்
செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
 தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆபரேசன் சேது திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை
கப்பல் துயுடுயுளுர்றுயு கப்பல் இலங்கை கொழும்பில் இருந்து நேற்று 01.06.2020 அன்று713 பயணிகளுடன் புறப்பட்டு இன்று 02.06.2020 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குவந்தது. கடந்த 2 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்களை இந்த
கப்பலின் மூலம் அழைத்து வரப்பட்டது. கப்பலில் இருந்து இறங்கியதுடன் பயணிகளுக்குஉடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று நோய்
அறிகுறிகள் உள்ள நபர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொரோனாதொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இல்லலாதவர்களுக்கு
குடிவரவு நுழைவு மற்றும் உடைமை சோதனைகளை செய்து மாவட்டம் வாரியாக பிரித்துபேருந்துகளில் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க்பபடுகிறது.இப்பணிகளுக்காக 25 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த மாவட்ட
ஆட்சித்தலைவர்களுக்கு பயணிகளின் விவரங்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அவர்களது மாவட்டங்களுக்கு சென்று அடைந்தவுடன், அரசுதெரிவித்தள்ளவிதிகளின்படி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுதனிமைப்படுத்தப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத நபர்கள்                                             வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நமது மாவட்டத்தை சார்ந்த 57 பயணிகளும்,
திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 10 பயணிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரளாஉள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த 7 நபர்களும் இந்த கப்பலின் மூலம் இன்று வருகை
தந்தார்கள். கப்பல் மூலம் வருகை தந்த பயணிகளுக்கு அனைவருக்கும் காலை
உணவு, மதிய உணவு, தேவையான குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு
கழகத்தின் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பால கோபாலன்,
இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்
(வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங்
காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர்
திரு.பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எம்.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., துறைமுக
பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் திரு.ரவிகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, மாவட்ட உணவு பாதுகாப்பு
அலுவலர் மரு.மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சமூக
பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்ட
துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், டிராபிக் மேனேஜர் திரு.பிரபாகர்,
வட்டாட்சியர்கள் திரு.ரகு, திரு.சந்திரன், துணை இயக்குநர் சுகாதார பணிகள்
மரு.கிருஷ்ணலிலா, மாநகராட்சி நிர்வாக பொறியாளர் திரு.பார்திபன், தூத்துக்குடி நகர்
நல அலுவலர் டாக்டர்.அருண்குமார், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு
அலுவலர் திரு.சசிகுமார் மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள்;
கலந்துகொண்டனா                                      

கருத்துகள்