மரவள்ளிகிழஙகில் மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்


மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம்வகிக்கிறது
.
 மரவள்ளியில் தற்பொழுது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம ;அதிகமாக தென்படுகிறது.இம்மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின ;அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருதுகள்
உருமாறியும், வளர்ச்சிக்குன்றியும் காணப்படும். மேலும் நுனியிலுள்ள இலைகள்ஒன்றுடன் ஒன்றாக இணைத்து முடிக்கொத்தாக தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள ;நீளம் குறைந்துவிடும். தண்டுகள் சிதைவடைந்து காணப்படும் இதனால் ஒளிச்சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

மரவள்ளிகிழஙகில மாவு பூசசியை கட்டுப்படுத்த மேற்க்கொள்ள வேண்டிய நடவடிககைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல் இப்பாதிப்னை குறைவதற்கு கீழ்க்காணும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
முறையினை பின்பற்றுறுதல் வேண்டும்

1. போதிய அளவு நீர்; பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும்.


2. நடவு செய்யும் பொழுது அடி உரமாக ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம்
 புண்ணாக்கு பயன ;படுத்தல் இப்பூச்சியின் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.


3. தாக்குதலானது மரவள்ளி பயிரின் நுனிக்குருத்து பகுதியில் அதிகமாக
 இருப்பதால் நுனிக்குருத்தை பறித்து, எரித்து பூச்சிகளை பெருவாரியாக
 கட்டுப்படுத்தலாம்.


4. பிற மாவட்டம் அல்லது மாநிலத்திலிருந்து நடவுப்பொருட்களை வாங்கி வந்தால், நடவின் போது பூச்சி மருந்து கரைசலில் 60 நிமிடங்கள் நடவுக்கரணைகளை நனைத்து நடவு செய்ய வேண்டும்


5. பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து நடவுப் பொருட்களை தேர்வு செய்யக்கூடாது.


6. ஒரு எக்டருக்கு 2000 மி.லிட்டர் அசாடிராக்டின் 1500 பி.பி.எம். என்ற அளவில்
  தெளிப்பதன் மூலமும், தொடர்ச்சியாக 15 தினங்களுக்கு பிறகு  புரொபினோபாஸ் 50 நுஊ என்ற கரைசலை 1 எக்டருக்கு 1000 மி.லிட்டர்
 அளவில் தெளிப்பதன ;மூலமும் இப்பூச்சித ;தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
மேற்கண்ட  தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்



http://bit.ly/viewintamil

கருத்துகள்