முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால்
ஆடிக்கொடை திருவிழா 28.07.2020 கொடைக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கி திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது. நாளை (28.07.2020) காலை கொடைக்கால் நடும் நிகழ்ச்சியும்இ இரவு முளைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும்இ திருவிழா நிகழ்வுகள் 03.08.2020 அன்று தீபாராதனை . 04.08.2020 அன்று
திருக்கோவில் வளாகத்திற்குள் கும்பம் (கரகம்) புறப்படுதல்இ அன்று இரவு தீச்சட்டி புறப்படுதல்இ 05.08.2020 அன்று முளைப்பாளிகை திருக்கோவிலில் வலம் வருதல் உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலை காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில்உள்ளதால்இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும், கொரோனாபரவலை தடுக்கஅரசுஎடுக்கும்நடவடிக்கைகளுக்குஒத்துழைப்புஅளிக்குமாறும்கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப்நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக