முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்



தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். என திட்ட மேலாளர் தகவல்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 

தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., மற்றும் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக், பயோகெமிஸ்டரி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஓட்டுநர் பணிக்கு 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று 1 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். 

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிகழத்தின் எந்த மாவட்டத்திலும் பணி அமர்த்தப்படலாம். அதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவர். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பகல் இரவு என பணியமர்த்தப்படுவர்.

 தகுதியுடைய நபர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம், அடையாளச் சான்று, முகவரிச்சான்று மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அரசு தொழிற்கல்வி வளாகத்தில் 03.09.2020 அன்று மருத்துவ உதவியாளர் பணிக்கும் மற்றும் 03.09.2020, 04.09.2020 அன்று ஓட்டுநர் பணிக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர் முகத்தேர்வுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...