முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்



தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்; தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். என திட்ட மேலாளர் தகவல்.

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 

தமிழகத்தில் 950க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., மற்றும் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக், பயோகெமிஸ்டரி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஓட்டுநர் பணிக்கு 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று 1 வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். 

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிகழத்தின் எந்த மாவட்டத்திலும் பணி அமர்த்தப்படலாம். அதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவர். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பகல் இரவு என பணியமர்த்தப்படுவர்.

 தகுதியுடைய நபர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம், அடையாளச் சான்று, முகவரிச்சான்று மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அரசு தொழிற்கல்வி வளாகத்தில் 03.09.2020 அன்று மருத்துவ உதவியாளர் பணிக்கும் மற்றும் 03.09.2020, 04.09.2020 அன்று ஓட்டுநர் பணிக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர் முகத்தேர்வுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்