வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் சுப்பிரமணியன் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் மலர் அஞ்சலி

.                                                                                  வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள்  கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் வீர மரணமடைந்துள்ளார். 


அவருக்கு இன்று (20.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும், அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


 அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரையாற்றிய போது காவலர் சுப்பிரமணியன் அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவருக்கு வயது 28, அவருக்கு மனைவி மற்றும் சிவஹரிஷ் என்னும் 10 மாத ஆண் குழந்தை உள்ளது, அவர் நினைத்திருந்தால் தப்பியோடிய ரவுடியை பிடிக்காமல் விட்டு உயிர் தப்பியிருக்கலாம். அவர் கடமைதான் முக்கியம் என்று கருதி, தனது உயிரையும், தனது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் ரவுடியை பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணடைந்துள்ளார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார். 


இந்த அஞ்சலியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், திரு. கோபி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு திரு. இளங்கோவன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்ஆய்வாளர் திரு. பாலமுருகன், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அன்னபூரணி, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் ஆய்வாளர் திரு. கஸ்தூரி  மற்றும் காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, சங்கரன், கண்காணிப்பாளர்கள் திரு. மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், மாரிமுத்து, நம்பிராஜன் உட்பட  உதவியாளர்கள், இளநிலை உதவியாளாகள், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


 

கருத்துகள்