முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்திறந்து வைப்பு

 

21.08.2020

தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடியின் புதிய கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். 


தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


பின் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடி நீண்ட நாள் கோரிக்கையாகும். அருகில் தென்காசி மாவட்டம் உருவாகியுள்ளது. சோதனைச் சாவடி என்பது மிக, மிக முக்கியமான ஒன்றாகும். முன்பு இந்த சோதனைச் சாவடி சாதாரண கொட்டகையாகத்தான் இருந்தது. இப்போது காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு;ள்ளது. இந்த சோதனைச்சாவடி அமைந்திருப்பது உங்களுடைய சமுதாயப்பணியில் ஒன்றாக இந்த திறப்பு விழா அமைந்துள்ளது, இந்த சோதனைச் சாவடி கட்டிடம் கட்டுவதற்கு கழுகுமலை மக்கள் அனைவருமே உதவி புரிந்துள்ளனர். எனவே கழுகுலை வாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நோய் ஒரு மோசமான வியாதி. இந்த வியாதி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதால் 90 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதனுடைய தாக்கம் இன்னும் நான்கு, ஐந்து மாதங்கள் இருக்கத்தான் செய்யும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருமே இந்த நோய் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் மன உளைச்சலில் உள்ளனர், அதனால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களிடம் காவல்துறை பொதுமக்களிடையே நல்ல இணக்கத்துடன், நல்ல உறவுடன் இருக்க வேண்டும் என்றும், காவல்துறை பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை, நாங்கள் உங்களில் ஒருவர்தான், இப்போதுள்ள இந்த நல்லுறவு இனிமேலும் தொடரவேண்டும் என்று சிறப்புரையாற்றி, சோதனைச்சாவடி வளாகத்தில் மரக்கன்று நட்டார்.


இந்த திறப்பு விழாவில் கழுகுமலை வர்த்தக சங்கத்;தலைவர் திரு. அந்தோணி மற்றும் உறுப்பினர்கள், ஆர்.எம்.ஆர் மில் உரிமையாளர் திரு. ரமேஷ், ஊர் நாட்டாமை திரு. மகேஷ்வரன், திரு. போஸ், திரு. பாஸ்கர், திரு. ராஜேந்திரன், திரு. ராதா கிருஷ்ணன், திரு. செந்தில், திரு. அருணா, திரு. மாரியப்பன், சுப்பிரமணியன், மற்றொரு மாரியப்பன், திரு. கருப்பசாமி, திரு. முப்பிடாதி, திரு. லோகு, திரு. பசுபதி, திரு. கந்தசாமி ஆகியோர் உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கழுகுமலை காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...