முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : மாவட்ட திறன்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உரை

                                                                                          

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் செப்டம்பர் 2020 மாதத்திற்கான மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (08.09.2020)  அன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகலாபுரம் மற்றும் வேப்பலோடை ஆகிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு 15.09.2020 என்பதை அனைத்து தரப்பினருக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற் பழகுநர் பயிற்சித்திட்டத்தினை முழுமையான அளவில் அமுல்படுத்துதல், குறுகிய கால பயிற்சித் திட்டங்களான அம்மா திட்டம்,   TNSDC, PMKVY 2.0, RPL   போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்ற மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்க அனைத்து தொழில் நிறுவனங்களும் முன் வரும் வகையில் ஊக்கப்படுத்திட வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் 12 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020-க்கான சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால்,  www. skilltraining.tn.gov.in என்ற  இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    மேலும்;  NLC, ICF, CPCL  போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் பிரைவேட் ஜாப் போர்ட்டல் -ல் தொழிற் பழகுநர் தேவைக்காக பதிவு செய்த நிறுவனங்களுக்கு தேர்ச்சியடைந்தோர் பட்டியல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான நிறுவனங்களிலும் தொழிற் பழகுநர் மற்றும்   BTP பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்தும் கல்வி இடை நிறுத்தம் செய்த மாணவர்கள் பட்டியல் மற்றும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தோர் பட்டியல்களும் பெறப்பட்டு அவர்களை ஐடிஐ-ல் சேர்க்க நடவடிக்கை எடுக்க மாவட்ட திறன் குழுவினரும், அலுவலர்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் திருமதி.ரேவதி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மாவட்;ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநர் திருமதி.ம.பேச்சியம்மாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் திருமதி.ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா, தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநர் திரு.எஸ்.பழனி,; அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் திரு.ஆ.செல்லக்கனி(வேப்பலோடை), திரு. எஸ்.அருள், (திருச்செந்தூர்), திரு. ராஜன், (நாகலாபுரம்) மற்றும் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...