முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

  சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்த நாள் அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை



தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் உள்ள  திருவுருவ சிலைக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

--------

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்,  வ.உ.சி இல்லத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் இன்று (05.09.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார்,இ.கா.ப., விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.போ.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

சுதந்திர போராட்ட வீரர்கள் அதிகம் பேர் வாழ்ந்து மறைந்த புன்னிய பூமியாக தூத்துக்குடி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான சுதந்திர போராட்ட வீரர் வாழ்ந்த மண்,  நமது புனித மண் ஆகும். ஒட்டப்பிடாரத்தில் பிறந்த செக்கிழத்த செம்மண் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளையரை எதிர்த்து சுதேசி கப்பல் கம்பெனி நடத்தியவர். அதன் விளைவாக எண்ணற்ற துயரங்களை அணிவித்து நாட்டுகாக சிறையிலேயே தனது வாழ்நாளை கழித்து தனது இன்னுயிரையும் இழந்தார். வ.உ.சி அவர்களின் பெயர் என்று நினைத்து இருக்கும் வகையில் மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்கள் வ.உ.சி அவர்களுக்கு திருநெல்வேலியில் மணிமண்டபம் அமைத்ததுடன் அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அரசுடமையாக்கப்பட்ட அவரது இல்லத்தில் முழுவுருவ வெண்கல சிலையும் திறந்து வைத்தார்கள். அவரது பிறந்த நாளான செப்டம்பர்-5 அன்று தமிழக அரசின் சார்பில்  ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று வ.உ.சி அவர்களின் 149 வது பிறந்த நாளில் தமிழக அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நாட்டுபற்றுடன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் வ.உ.சி அவர்கள். அவரது நாட்டுபாற்றினை அனைவரும் அறிந்து பின்பற்றிட  வேண்டும் என்பதற்காக அவரது நினைவை பொற்றும் வகையில் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் வ.உ.சி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது வாழ்ககை வரலாற்று புகைப்படத்தினை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெப்பமிட்டார். 

முன்னதாக ஒட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியார் திருமதி.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன்,  ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் திரு.ராகு, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் திருமதி.எலிசபெத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கெலென், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.கேசவமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு அச்சக குழு தலைவர் திரு.அன்புராஜ்,  மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், கருங்குளம் ஒன்றிய துணைத் தலைவர் திரு.லெட்சுமண பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினார் திரு.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.அழகிரி (எ) கோபி, வ.உ.சி அவர்களின் வாரிசு திருமதி.செல்வி முக்கிய பிரமுகர்கள் திரு.ஜவகர், திரு.முத்துசாமி, திரு.சுடலைமணி, திரு.முருகேசன், திரு.எம்.எஸ்.கண்ணன், திரு.பரமசிவம், திரு.கருப்பசாமி, திரு. ஆலோசனை மரியான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...