முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம்




தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (19.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு 22 பேருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன  உத்தரவினை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி ஐஏ -க்கான தேர்வில் தேர்ச்சி பெற்று இணைய வழி கலந்தாய்வில் கலந்துகொண்டு நியமன ஆணை பெறும் உங்களின் வாழ்வில் இன்று முதல் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது. இளநிலை உதவியாளர் பணி மிக முக்கிய பணி ஆகும். பல்வேறு முக்கிய கோப்புகளை கையாள வேண்டியிருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன உத்தரவினை வழங்கி தமிழகம் முழுவதும் 633 நபர்களுக்கு உத்தரவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்டங்களில் அமைச்சர்கள் மூலம் இந்த உத்தரவுகள் இன்றே வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். நமது மாவட்டத்தில் 22 நபர்களுக்கு தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் வகையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நியமன ஆணை பெறும் உங்களின் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் ஆகும். எட்டயபுரம் புரட்சிக்கவிஞர் பாரதியார் வாழ்ந்த மண்ணில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இன்னும் நீங்கள் மேலும் பல்வேறு தேர்வுகளை எழுதி உயர்ந்த பதவிகளை பெற வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன்இ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர்இ முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரிஇ கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.விஜயாஇ கூட்டுறவு அச்சக தலைவர் திரு.அன்புராஜ்இ எட்டயபுரம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.ஆழ்வார்உதயகுமார்இ மாவட்ட கல்வி அலுவலர் திரு.முனியசாமிஇ பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.அனிதாஇ உதவி திட்ட அலுவலர் திரு.சுப்பிரமணியம்இ ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கோபி(எ)அழகிரிஇ முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார்இ திரு.வண்டானம் கருப்பசாமி மற்றும் அலுவலர்கள்இ முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...