தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட மானியம் வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட 2020-2021-ம் நிதி ஆண்டு முதல் 2024-2025 –ம் நிதி ஆண்டு வரை ஐந்து நிதி ஆண்டுகளுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுபிரிவினருக்கு 40மூ சதவீத மானிய உதவியும், தாழ்த்தப்பட்டஃ பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு 60மூ மானிய உதவியும் புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக்குட்டை அமைத்தல், உயிர்கூழ் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், வண்ணமீன் வளர்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளர்த்தல், கூண்டுகளில் மீன்வளர்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளர்த்தல், மற்றும் கடல்; வண்ணமீன் சேகரித்தல் ஆகியவைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக