முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது : 6 பைக்குகள் பறிமுதல் - தனிப்படைக்கு எஸ்.பி - பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்குகள் திருடிய இருவர் கைது, அவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

.




தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த சுடலைமணி மகன் சந்தனமுத்து (20) என்பவரது  இரு சக்கர வாகனம்  நகர் விலக்கு பகுதியிலும், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூரைச் சேர்ந்த செல்லப்பா மகன் செல்வமதுகரன் என்பவரது  இரு சக்கர வாகனம் அதே பகுதியிலும், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் மதன்குமார் (30) என்பவரது வாகனம் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி முள்ளக்காட்டைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முனியசாமி (27) என்பவரது வாகனம் அதே கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மணி மகன் தினேஷ் (19) என்பவரது வாகனம் நகர் விலக்கு அருகேயும் மற்றும் விளாத்திக்குளம், பல்லாகுளத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் வரதராஜ் (25) என்பவரது வாகனமும் கீரீன் கேட் நுழைவு வாயில் அருகேயும் கடந்த 31.07.2020 முதல் 19.09.2020 வரை மேற்படி 6 பேர்களது இரு சக்கர வாகனங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வந்ததையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கோகிலா, உதவி ஆய்வாளர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு. பென்சன் மற்றும்  தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெனிவர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.   

 

அதன்பேரில் மேற்படி தனிப்படையினர் தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் வாகனம் திருடுபோன நேரங்களை கணக்கிட்டு எதிரிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் இன்று (05.10.2020) காலை 11.00 மணிக்கு மீண்டும் திருச்செந்தூர் ரவுண்டானா அருகே ஹார்பர் ரோட்டில் வாகன தணிக்கை செய்தபோது,  இரு சக்கர வாகனங்களை திருடும் எண்ணத்துடன் வந்த திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலகிருஷ்ணன் (24) மற்றும் தச்சநல்லூர் மேலக்கரை நியூகாலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சக்தி கணேஷ் (24) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்து விசாரிக்க அவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களில் தெர்மல்நகர் காவல்நிலைய சரக பகுதிகளில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 6 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 


துரிதமாக செயல்பட்டு இரு சக்கர வாகன திருட்டில்  ஈடுபட்ட இருவரை   கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்த தெர்மல் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...