முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு



தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகை : அதற்கான முன். ஏற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் ஆய்வு செய்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு  பணிகள்  குறித்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் இன்று (10.10.2020) நேரில் ஆய்வு  மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெறும்; அரங்கங்கள், திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் புகைப்படக்கண்காட்சி அரங்கு அமைக்கப்பட உள்ள இடங்களிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள், திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன், அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஐ_ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்;த மார்ச் 23ந்தேதி  சட்ட மன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் கொரனோ தடுப்பு பணிகளோடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.என்று மக்களை நாளும் பொழுதும் தமிழக மக்களை காக்க வேண்டும். எனவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக  மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கடந்த மாதம் நடந்த கொரனோ தடுப்பு நடவடிக்கை காணொலி காட்சி உரையாடலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பாரட்டினார்.

கொரனோ தடுப்பு நடவடிக்கை கால கட்டத்திலும் தொடர்ந்து வளர்ச்சி பணியை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து கொரனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து பல்வேறு நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.29 கோடி புற்று நோய் சிகிச்சை அளிக்கும் நவீன கதிர்வீச்சு கருவி மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். இவ்வாறு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் சார்ஆட்சியர் திரு.சிம்ரோன் ஐPத் சிங் கலோன், இ.ஆ.ப.,அவர்கள் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திருமதி.அமுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன்,  முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.திருப்பற்கடல், திரு.காசிராஜன், திரு.செம்பூர் ராஜ் நாராயணன், திரு.அழகேசன், திரு.விஜயகுமார், திரு.வீரபாகு மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...