முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்

 

திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்

 



தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூரில்; போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்; தலைமையில் நடைபெற்றது. 

  (15.10.2020) மாலை திருச்செந்தூர் செல்வம் மஹாலில் போலீஸ் - வியாபாரிகள் சங்க நல்லிணக்கக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும் போது, நமது உடம்புக்கு தண்டுவடம் எப்படி முக்கியமானதாக உள்ளதோ,  அதேபோன்று ஒரு நகரம் அல்லது கிராமத்தின் தண்டுவடம் வியாபாரிகள் ஆகும், ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தான். போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள் தான். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் காவல்துறைக்கும் ஒரு நல்ல இனக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை - வியாபாரிகள் சங்க நல்லிணக்க கூட்டம்; நடத்தி வருகிறோம். வியாபாரிகள் காவல்துறையினரோடு ஒரு இனக்கமான சூழ்நிலையில் இருக்க விரும்புவார்கள், ஏனென்றால் மேற்சொன்னவாறு ஒரு நகரம் மேன்மையடைய வேண்டும் என்றால் வியாபாரிகள் மிக முக்கியம், அதனால் காவல்துறையினரும் ஒரு ஒத்துழைப்போடு ஒரு நல்ல எண்ணத்தோடு வியாபாரிகளிடம் பழக விரும்புகிறார்கள். எல்லா இடங்களிலும் காவல்துறையினர் - வியாபாரிகள் கலந்துரையாடல் நிகழ்சி மூலம் நல்ல புரிதல் ஏற்படும். அந்த புரிதலின் மூலம் நிறை குறைகள் தெரிய வரும். காவல்துறையினரிடம் குறைகள் இருப்பின் அதை நாமும் திருத்திக் கொள்ளலாம், வியாபாரிகளிடம் எதும் குறை இருந்தால் அதையும் சொல்லி திருத்திக் கொள்ளலாம். அதே போன்று சிசிடிவி கேமிராவை பொருத்துவது மிக முக்கியமான ஒன்று. சிசிடிவி கேமிரா காலத்தின் கட்டாயம், சிசிடிவி கேமிரா பொருத்துவதன் மூலம் ஒரு நிகழ்வு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு எளிய சாதனம்தான் சிசிடிவி கேமிரா, இன்றைக்கு காவல்துறையில் 90 சதவீதம் குற்றங்களில் சிசிடிவி கேமிரா மூலமாக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடிகிறது. அதனால் வீட்டிற்கு வெளியே ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம், தெருக்கள் சந்திப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமிரா அமைப்பதற்கு நீங்கள் முன்வந்து உங்கள் ஊரை குற்றமில்லா பகுதியாக மாற்றி காவல்துறைக்கு நல்ல ஒத்துழைப்பை தர வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசினார்கள்.

இக்கூட்டத்தில் திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் திரு. துரைசிங், நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. காமராஜ், யாதவர் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. பெரியசாமி, கோவில் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. பொன்ராஜ் உள்ளிட்ட வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞான சேகரன், தாலுகா காவல் நிலைய ஆய்வளார் திரு. முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...