தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் முன்னிட்டு இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு வாரம் 27.10.2020 முதல் 02.11.2020 வரை கடைபிடிப்பதை தொடர்ந்து இன்று (27.10.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உறுதிமொழி
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணநை;து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் ஊறுதுணையாக விளக்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே, நான்
அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,
இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்,
அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்
பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவன் என்றும்
தனிப்பட்ட நடத்தையில நேர்மையை வெளிபடுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும்
ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறென் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சுப்புலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், செரஸ்தார்கள் திரு.இளங்கோ(பொது), திரு.ஜான்சன் (குற்றவியல்), பறக்கும் படை வட்டாச்சியர் திரு.ஞானராஜ், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக