முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டு

 



         தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது  - ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. 

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5  மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15.05.2020 அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக  16.05.2020 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் தலைமையில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலு, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் மற்றும் காவலர் செந்தில் குமார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார். 


மேற்படி தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று (03.10.2020) கொற்கையில் உள்ள ஒரு வங்கியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஏரல், இடையற்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகன் ராமஜெயம் (37) என்பவரை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் தனிப்படை போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்ததில் அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார்தாரர் பிச்சையம்மாள் வீட்டில் ஏணிப்படி கட்டும் வேலைக்கு சென்று வந்ததாகவும், அப்போது பேச்சியம்மாள் மகன் மற்றும் மகள் வெளியூரில் வசித்து வருகின்றனர் என்பதையும், வயதான பிச்சையம்மாள் மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருவதையும் தெரிந்து வைத்துள்ளார். 

இதனை நோட்டமிட்ட எதிரி ராமஜெயம் 15.05.2020 அன்று  செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். பின் திருடிய நகைகளை ராமஜெயம் தனது வீட்டின் பின்புறம்  உள்ள மாட்டுத் தொழுவத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றவுடன் அவற்றை அங்கிருந்து எடுத்து கொற்கை மற்றும் சிவத்தையாபுரத்தில் உள்ள வங்கிகளிலும் மற்றும் சாயர்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும் அடமானம் வைத்து, அந்தப் பணத்தை ராமஜெயம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துள்ளார். 

இது குறித்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள வங்கிகளில் விசாரணை செய்து வருவைதையறிந்த எதிரி ராமஜெயம் மேற்படி அடகு வைத்த திருட்டு நகைகளை திருப்புவதற்காக நின்று கொண்டிருந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார். 

 அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ராமஜெயத்தை கைது செய்து, திருடிய 13 பவுன் தங்க நகைகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். 

மேற்படி ராமஜெயத்தை கைது செய்து, திருடிய நகைகளை பறிமுதல் செய்த மேற்படி தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்