முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் ஆய்வு

                       தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் ஆய்வு                                                                                                                                                     



 

தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் தருவை மைதானம் ஜார்ஜ் ரோடு பகுதியில் மழை வெள்ள நீரை மாநகராட்சி மூலம் மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பணிகளை

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

---------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெயசீலன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்களுடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் தூத்துக்குடி ஆய்வு மளிகையில் ஆய்வு கூட்டம் இன்று (18.11.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீர் மோட்டார் மூலம் எந்தெந்த பகுதியில் அகற்றப்படுகிறது. எவ்வளவு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி விரைந்து மழை நீரை அப்புறப்படுத்தவும் மோட்டார்கள் பயன்படுத்த முடியாத பகுதியில் நீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மழை வெள்ளம் காரணமாக சுகாதார குறைபாடுகள் ஏதும் ஏற்படாத வகையில் சுகாதார சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி தருவை மைதானம் ஜார்ஜ் ரோடு பகுதியில் மழை வெள்ள நீரை மாநகராட்சி மூலம் மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். 

தொடர்ந்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையின்போதுதான் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். தற்போது ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. இயல்பான மழை பெய்து வரும் நிலையில் கடந்த 16ம் தேதி திங்கட்கிழமை ஒரே நாளில் தமிழகத்திலே அதிக மழையாக 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் அதிக கன மழை பெய்த காரணத்தால் ஒரு சில பகுதியில் நீர் தேங்குகின்ற நிலை ஏற்படுகையில் அதனை உடனடியாக எவ்வாறு சரி செய்வது குறித்து மாநகராட்சி அலுவலரிடம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும், தெங்கிய தண்ணீரை அகற்றவும், போர் கால அடிப்படையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்தன் காரணமாக வெள்ள நீர் வடிந்து பாதிப்பு இல்லாத நிலை உள்ளது. மாநகராட்சி மூலம் 70 மோட்டார் இயந்திரங்களை பயன்படுத்தியும், மேலும் ஊரக பகுதியில் இருந்து 10 மோட்டார் கொண்டு வரப்பட்டு 80 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மோட்டார்கள் தொடர்ந்து இயக்கபடும் காரணத்தால்தான் மழை நீர் நிறைந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இருக்கின்ற நீர் விரைந்து வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலான மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையிலே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் காயல்பட்டணம் பகுதியில் 21.5 செ.மி. மழை பெய்ததன் காரணமாக ஒரு சில பகுதியில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. அங்கேயும் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மழை நீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபடியான மழை பெய்து இருந்தாலும் கூட மக்களுக்கு எவ்வித இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் செய்யபட்டு வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாநகராட்சி தலைமை பொறியாளர் திரு.சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.திருப்பாற்கடல், திருமதி.செரினாபாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...