தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சாதனையாளர்களிடம் இருந்து டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த
சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, இந்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே
தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த
சாதனையாளர்கள் நிலம், நீர் மற்றும் காற்று தவிரஇவற்றிற்குவிதிவிலக்கான சாகசதிறன்களைபெற்றிருக்கவேண்டும்மேலும் 2017, 2018 மற்றும் 2019ம்ஆண்டுகளில் இவர்கள் செய்த சாதனை நிகழ்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதரவிவரங்களைதமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in.ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்;. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுலலகத்தில் 29.06.2020 தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக