முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

   மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணி நியமன ஆணை வழங்க உள்ளார்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

------------------------------------------------------------------------------------------------------------------------------


மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலை வாய்;ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இணைந்து வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 29.01.2021அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.  இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர்.இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்;ப்பு முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலைபட்டதாரி டீ.நு.இ னுipடழஅயஇ ஐவுஐ படித்தவர்கள் உள்ளிட்டஅனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.  மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்துகொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவிருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம். 

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படஉள்ளது. எனவே,மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவுபுகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். 

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கோவில்பட்டி பழையபேருந்து நிலையத்திலிருந்தும், புதிய பேரூந்து நிலையத்திலிருந்தும் கல்லூரியின் இலவசபேருந்து மற்றும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலோ அல்லது வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்றுவந்தாலோ அவர்களின் வேலைவாய்ப்புபதிவு மூப்புரத்து செய்யப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்; மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...