முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பாக. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு :

 தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பாக. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு :


            தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாhஅவர்கள்;. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ அவர்கள் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

------------------------------------------------------------------------------------------------------------------------------------------


            தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.செ.கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

                      

            தூத்துக்குடி    இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன்மாவட்ட ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மழைவெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவராண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள் அதனடிப்படையில் வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வருவாய்த்துறையும்இணைந்து நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் சிறுதானிய வகைகள்,பயிர் வகைகள்,மக்காச்சோளம் பயிர்கள்,மிளகாய் பயிர்கள், உள்ளிட்ட அனைத்து வகையான பயிர் சேதங்களையும் விரைந்து கணக்கெடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்ட ஓரு விவசாயிகள் கூட விடுபடாமல் இக்கணக்கெடுப்பு சிறப்பாக செய்திட வேண்டும்.என உத்தரவிட்டார்.மேலும் மழை வெள்ள பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தரவேண்டும்.எந்த உயிர்சேதமும் இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவர்கள் செய்தியார்களிடம் தெரிவித்தாவது.



               திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில்  பெய்து வரும் கனமழையின் காரணமாக பிரதான அணைகலான பாபநாசம,; சேர்வலாறு மணிமுத்தாறு மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்றும்  அணைகட்டுகளிலும் நீர் மட்டம் முழு கொள்ளளவு எட்டியதை அடுத்து அணைகளுக்கு வரும்  நீர் வரத்து அதிகரித்துள்ளது. காரணமாக தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால்       தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கரையோர பகுதியிலே மக்களை நிவாரணமுகாமில் தங்கவைத்துள்ளோம.மருத்துவ உதவிகளும்.உணவு வழங்கப்படுகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. 24 மணி நேரமும் நீர் நிலைகள் கண்காணிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில்; தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு 200 இடங்களில் மோட்டார்கள் தாயர் நிலையில ;உள்ளது. அதையும் தாண்டி சவலாக எதிர் கொள்ளும் வகையில் நம்முடைய மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படிமாநகராட்சி ஆணையர் சிறந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதே போல அனைத்து பகுதியிலும் நீர் செல்கின்ற நீரோட்டமுள்ள பகுதியிலும் மக்கள் வேடிக்கை பார்க்க தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் செல்பி எடுப்பது விளையாட செல்வது குளிக்க செல்வது துணிதுவைக்க செல்வது கால்நடைகளை குளிப்பாட்ட செல்வது தடை செய்யப்பட்டுள்ளது பகுதி என்பதை ஐNனுஐஊயுவுநு செய்து காவல் துறையும் வருவாய்துறையும் உள்ளாட்சி துறையும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலில் அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த மழைக்காலங்களில் ஏற்படுகின்ற காய்ச்சல் இது போன்ற 200 அம்மா மினி கிளினிக் கொடு;த்தது போல அனைத்து பகுதியிலும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் இந்த பகுதியிலும் சுநடகை உயஅp நடத்தப்படுகின்றன.

               தூத்துக்குடி மாவட்டத்தில்; பயிர் சேதங்கள்  அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக மானவாரி பயிர் சேதம் அதிகமாக இருக்கின்றது. டிசம்பர் மாதம் சராசரி  மழை என்பது 10அஅ தற்போது 108.7அஅ மழை பெய்துள்ளது.அதை எதிர் கொள்வதற்கு  மாவட்ட நிர்வாகம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு தயார் நிலையில் இருக்கிறது. இதில் பொது மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகளை செய்து தர மாவட்ட ஆட்சியருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவும், அறிவுரையும் வழங்கி இருக்கின்றார்கள். குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மாவட்டம்  மழை அதிகமாக உள்ள காரணத்தினால் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர், ஆதிதிராவிட அமைச்சர் நானும்  குழுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்து முடித்து விட்டு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்து இருக்கிறோம்.சில பணிகள் எல்லாம் வேகப்படுத்த அதற்கானஅறிவுரைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.  இந்த பொங்கல் விழா நேரத்தில்கூட இரவு பகல் பாரமால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணியாற்றுகின்றனர்.காவல் துறை கண்காணிப்பாளர் nஐயக்குமார் அவர்களும் பணியாற்றுகின்றனர்.

               இந்த பெறு மழையால் அறுவடை நிலையில் இருந்த நெற்பயிர்கள் மானவாரி பயிர்கள்,இதரப்பயிர்கள்,அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகளுக்கு  ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள வயல்களில் போர்கால அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். எனவே மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு நிவராணத்தொகையை விரைவில் வழங்க மாண்புமிகு முதலமைச்சர்; அவர்கள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். என்பதை விவசாய பெருங்குடி மக்களுக்கு நான் தெரிவித்து கொள்கிறேன். விவசாயியும் கவலைப்பட வேண்டாம். ; அறுவடை நேரத்தில் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு இருக்கின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அம்மாவின் அரசு உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் கடந்த ஆண்டு நிவாரண நிதியாக 565 கோடி கொடுத்து இருக்கிறோம்;.

           தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி,விளாத்திகுளம்,எட்டையபுரம்,பகுதியில் அதிகஅளவில் மானவாரி பயிர்களும் ஸ்ரீவைகுண்டம் ஏரல் திருச்செந்தூர் பகுதிகளில் வாழை நெல் உள்ளிட்ட நஞ்சை பயிர்களும் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேளாண்மைத்துறை அலுவலர்கள் வருவாய்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து உடனடியாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் நிவாரண உதவிகள் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

                  மாநகராட்சி ஆணையர் திரு.nஐயசீலன்,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்.இ.கா.ப., சார்ஆட்சியர் திரு.சிம்ரன் ஜித் சிங் கலோன்;,இ.ஆ.ப., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன்,இணை இயக்குநர் வேளாண்மை திரு.மொகைதீன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் திரு.அண்ணாதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அப்துல் காசிம் மற்றும் பல்வேறு துறை அலுலர்கள் கலந்து கொண்டனர்.

       .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...