பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்

         

பொறியியல் பட்டதாரி வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுத்த மாவட்ட எஸ்.பி திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள்
                                                                                                  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் குற்றங்கள் நடவாமல் தடுக்கும் பொருட்டும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அந்தந்ந காவல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு காவலர்களை கிராம விழிப்புணர்வு அதிகாரியாக நியமித்து, ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு கண்டு வருகிறார்.                                                                                                                            அவ்வாறு       அவ்வூரு கிராம    விழிப்புணர்வு கூட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தீய வழிகளில் செல்லக்கூடாது, நன்கு படித்து நல்ல நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்று கூறியருந்தார்.                                                                                                                                                                          அதன்படி பொறியியல் பட்டதாரியான ஸ்ரீவைகுண்டம் துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன அசோக் சாம்ராஜ் (24) என்பவர் தனக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டார்.                                                                                                                                      முறையிட்டதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன் மூலமாக தனியார் நிறுவனமான ரமேஷ் ஃபிளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன துணைத் தலைவர் திரு. சந்திரசேகரன் மற்றும் முதுநிலை மேலாளர் திரு. தெய்வநாயகம் ஆகியோரை தொடர்பு கொண்டு மேற்படி அசோக் சாம்ராஜ்க்கு பணி வழங்க கோரியதன் அடிப்படையில் அந்நிறுவனத்தில் வாசைன திரவியம் உற்பத்தி செய்யும் பிரிவில் மெஷின் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                         அந்தப் பணியாணையை  (08.01.2021)    அன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் மற்றும் மேற்படி நிறுவனத்தினர் அசோக் சாம்ராஜ்க்கு வழங்கினர்.                                                                                                                                                                                                       பணியாணையை பெற்றுக்கொண்ட அசோக் சாம்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.   இந்நிகழ்வின்போது ரமேஷ் ஃபிளவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர்,  தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்து சுப்பிரமணியன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள்