முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா நகரும் நியாய விலை கடை அமைச்சர் - .கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைப்பு .

 . 





தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் ஆவுடையம்மாள்புரம், இராமநாதபுரம் மற்றும் பட்டியூர் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலை கடை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (10.02.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு ஆவுடையம்மாள்புரம், இராமநாதபுரம் மற்றும் பட்டியூர் ஆகிய பகுதிகளில்; அம்மா நகரும் நியாய விலை கடையினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.


பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள்;  பேசியதாவது:


மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களால் நான் மக்களுக்காக நான் என தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கென தனியாக குடும்பம் எதுவும் கிடையாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்திய அத்தனை திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  அவர் விவசாய குடும்பத்தில் பிறந்து தற்போதும் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரு விவசாயிக்குதான் விவசாயிகளின் கஷ்டம், பொதுமக்களின் கஷ்டங்கள் நன்றாக தெரியும். கிராமப்புற மக்கள் குடிமைப்பொருட்களை வாங்க நீண்ட தூரம் நடந்து சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை தொடங்கி வைத்து அதற்கு அம்மா அவர்களின் பெயரை வைத்தார்கள். ஏனெனில் 2013 ஆண்டில் சென்னையில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு குடிமை பொருட்களை வழங்க நகரும் நியாய விலை கடை திட்டத்தினை முதன்முதலில் துவக்கி வைத்தார். அம்மா அவர்கள் துவக்கி வைத்த இத்திட்டம்தான் தமிழகம் முழுவதும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  எனவே இதற்கு அம்மா அவர்கள் பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றாகும்.  அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் மூலம் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். 


ஒவ்வொரு மாதமும் தங்களது கிராமத்திற்கென ஒரு நாள் ஒதுக்கப்பட்டு அன்று இங்கு வாகனத்தில் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வழங்கப்படும். அன்று ஏதாவது காரணத்துக்கு வாங்க இயலாத நிலை இருந்தால் நீங்கள் தாய் கடையில் எப்போதும் போல ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம்.  இப்பகுதிக்கு அரசு கொண்டு வரும் அத்தனை திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஜெ.ஜெ.எம். திட்டத்தில் இந்த கிராம பகுதிகளுக்கு அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு தேவையான வசதிகளும் உடனுக்குடன் செய்து தரப்படும். நீங்கள் அனைவரும் அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என பேசினார்.  


நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட கவுன்சிலர் திருமதி.பிரியாகுருராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ரவிசந்திரன், கோவில்பட்டி கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் திரு.ஜெயசீலன், வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், கூட்டுறவுத்துறை சிஎஸ்ஆர் திரு.முருகவேல், முக்கிய பிரமுகர்கள் திரு.வினோபாஜி, திரு.வண்டானம்கருப்பசாமி, திரு.செல்வகுமார், திரு.குருராஜ், திரு.பூமாரியப்பன், திரு.பிரான்சிஸ், திரு.முருகன், திரு.கிருஷ்ணசாமி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...