முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள்



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன்மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.தேர்தல்பார்வையாளர் களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 

-------------------------------தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வுசெய்யவும்,தேர்தல்செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், (IRS)அவர்களை 9489947507 என்ற கைபேசி எண்ணிலும், திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு ராகேஷ் தீபக,; (IRS)அவர்களை 9489947508 என்ற கைபேசி எண்ணிலும், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு சுரேந்திர குமார் மிஸ்ரா, (IRS)அவர்களை 9489947509 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்களும் அரசியல் கட்சியனரும் புகார் அளிக்கலாம். தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம். 

பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 x 7 மணி நேரமும் இயங்கககூ; டிய தேர்தல் புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                 தேர்தல்தொடர்பான புகார்களை 18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், ஹெல்ப் லைன் எண்: 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் சி விஜில் என்னும் மொபைல் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். 

மேற்கண்ட எண்கள் தவிர்த்து 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொது மக்கள் அளித்திடும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தேர்தல்கள் தொடர்பான புகார்களை 0461-2352990 என்ற எண்ணில் தேர்தல் பார்வையாளர்களுக்கு நிகரி (FAX } மூலமாகவும் அனுப்பலாம்.  .                                                                                                                    எனவே இதைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது    என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...