முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ,  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

---------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள். மேலும், தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், காய்;ச்சல் முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்தும், கிராமப்பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி போடுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.


இக்கூட்டத்தில்  வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைiவுப்படுத்த வேண்டும். குறிப்பாக மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். வீட்டு தனிமையில் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்களை அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் 

கண்காணிக்க வேண்டும். சித்த மருத்துவ முறையில் கொரோனா பாதுகாப்பு மையம் செயல்படுவதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை சித்த மருத்துவ சிகிச்சை கொரோனா பாதுகாப்பு மையத்தில் 30 சதவிதம் உள்ளனர். இதை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசிகளும் தேவையான அளவில் பெற்று போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூம்மை வருவாய் நிர்வாக ஆணையர் திரு.பனிந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப.,  சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.முருகவேல், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு,  தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பாவலன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, நகராட்சி ஆணையர்கள் திரு.ராஜாராம்(கோவில்பட்டி), திருமதி.சுகந்தி (காயல்பட்டிணம்), பேரிடர் வட்டாட்சியர் திரு.செல்வபிரசாத் மற்றும் அலுவலர்கள்  கலந்துகொண்டனர். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்