முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் : மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வை

 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.  

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய மரங்களான வேம்பு, புங்கன், பூவரசு, புளி, வாகை உள்ளிட்ட 14 வகையான சுமார் 1 லட்சம் எண்ணிக்கையிலான மரங்கள் வளர்க்கப்படுகிறது. கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கு இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்த பகுதிகளில் பசுமை சூழல் ஏற்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும், பருவமழை குறிப்பிட்ட காலங்களில் தவறாமல் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அந்தந்த ஊராட்சிகளில் அடர்காடுகள் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். 

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியர் திரு.பேச்சிமுத்து, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அரவிந்தன், திருமதி.பானு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...