முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்





தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி  வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி கிராமத்தில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.  

-----------------------------





தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சியும், உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி பகுதியில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (20.06.2021) நடைபெற்றது.                                                                                                                                                                                               இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு, கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து கொரோனா 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்;கொண்டார்.                                                            


           

                                                                                                                                             மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் ரூ.12 லட்சம் மதிப்பில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளையும், சீர்காட்சி பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகளை துவக்கி வைத்தார். 


பின்னர் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நோய் தொற்றினை முற்றிலும் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நமது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கிராம பகுதிகளில் மிகவும் அச்சப்பட்டார்கள். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்ககொள்ள ஆர்வமாக பொதுமக்கள் முன்வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி நமது மாவட்டத்திற்கு தேவையானது தினசரி சென்னையில் இருந்து பெறப்படுகிறது. தடுப்பூசிகள் வரவர பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி நமக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்று மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். கொரோனா மூன்றாவது அலை மட்டுமின்றி எந்த ஒரு நோயாக இருந்தாலும் பொதுமக்களை காக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ துறையில் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். எனவே எந்த அலை வந்தாலும் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா தடுப்பூசியினை அனைவரும் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப.,  தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு.ராமச்சந்திரன்,  உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.நாகராஜன், திரு.பொற்செழியன், உதவி பொறியாளர் திரு.கார்த்திகேயன், முக்கிய பிரமுகர்கள் திரு.செங்குளி ரமேஷ், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.சுதாகர், திரு.பாலசிங், திரு.வால்சுடலை, திரு.அனஸ், பஞ்சாயத்து தலைவர்கள் திரு.ராஜரத்தினம், திரு.செந்தில் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...