தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் -----
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள் ஃ கூட்டு பொருப்பு குழுக்கள் ஃ மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஃ தனிநபர் தொழில்முனைவோர் ஃ தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பொது பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத்தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடர் ஃ பழங்குடியினர் ஃ மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி. தொலைபேசி எண்;: 0461-2320458 என்ற முகவரியில் வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை றறற.கiளாநசநைள.வn.பழஎ.in என்ற இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2021 ஆகும். என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக