முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைப்பு

 


தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

----------------------------

தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (04.06.2021) நடைபெற்றது. இம்முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். அங்குள்ள பொதுமக்களிடம் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார்கள். இத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர தடுப்பூசி போடுவது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே தடுப்பூசி போடும் அனைவரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது எப்போதும் கடைபிடிக்க வேண்டும். மிக முக்கிய அவசியமான காரணங்கள் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், சாணிடைசர், பிபி கிட் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார். உடன்குடி பகுதியை சேர்ந்த அங்கு 5ம் வகுப்பு மாணவி (தகப்பனார் பெயர் திரு.அப்துல் லத்திப், தாயார் திருமதி.பைக்கரா) சமிலா தாம் சைக்கிள் வாங்க வைத்திருந்த உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2100ஐ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு சேர்த்திட மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார். 


நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் திரு.அம்புரோஸ், திரு.சதீஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திரு.பாபு(உடன்குடி), திரு.முகம்மதுரபிக் (காணம்), முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.எ.பி.ரமேஷ்,  திரு.பாலசிங், திரு.ஜான்பாஸ்கர், திரு.அசாப், திரு.ரவிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...