தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைப்பு
தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
----------------------------
தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா மற்றும் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று (04.06.2021) நடைபெற்றது. இம்முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காணம் பேரூராட்சி காணம் கஸ்பா சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். அங்குள்ள பொதுமக்களிடம் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார்கள். இத்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர தடுப்பூசி போடுவது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே தடுப்பூசி போடும் அனைவரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது எப்போதும் கடைபிடிக்க வேண்டும். மிக முக்கிய அவசியமான காரணங்கள் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி பகுதியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், சாணிடைசர், பிபி கிட் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார். உடன்குடி பகுதியை சேர்ந்த அங்கு 5ம் வகுப்பு மாணவி (தகப்பனார் பெயர் திரு.அப்துல் லத்திப், தாயார் திருமதி.பைக்கரா) சமிலா தாம் சைக்கிள் வாங்க வைத்திருந்த உண்டியல் சேமிப்பு தொகை ரூ.2100ஐ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு சேர்த்திட மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் திரு.அம்புரோஸ், திரு.சதீஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திரு.பாபு(உடன்குடி), திரு.முகம்மதுரபிக் (காணம்), முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.எ.பி.ரமேஷ், திரு.பாலசிங், திரு.ஜான்பாஸ்கர், திரு.அசாப், திரு.ரவிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக