முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதிகளின் மேம்பாட்டு பணிகள் : பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு

 

தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

----------------------------

   தூத்துக்குடி திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு திட்ட பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சி.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.07.2021) நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார். 

                                                                                      திருச்செந்தூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள்                                                                                                                                                                                 



      திருச்செந்தூர்   பேருந்து நிலையம் விரிவுபடுத்தி புதுப்பிக்கும் பணிகளுக்கு திட்டமிடுதல் தொடர்பாக பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து திருச்செந்தூர் பேருராட்சியில் ரூ.11 கோடி மதிப்பிட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் வெளியேறுவதை நேரில் பார்வையிட்டனர்.                


                                                                                                          மேலும் ரூ.3.59 கோடி மதிப்பிட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து 83 ஏக்கர் பரப்பளவில் திருச்செந்தூர் பேருராட்சி குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டனர்.

     செய்தியாளர்கள் சந்திப்பில்                                                                                                                                                                                   பின்னர் பேரூராட்சிகளின் ஆணையர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருச்செந்தூர் பேருராட்சியில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பார்வையிடப்பட்டது. இன்னும் சில மேம்படுத்தும் பணிகள் செய்ய வேண்டிய உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன் ஆய்வு செய்யப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 285 வீடுகள் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் முழுமையாக அனைத்து வீடுகளும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை மூலம் பெறப்படும் கழிவு நீர் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும். திருச்செந்தூர் பேருந்து நிலையம் நவீனமுறையில் விரிவுப்படுத்த உள்ளது. முதல் தளத்தில் மல்டி லெவல் கார் பாக்கிங் மற்றும் டார்பென்டரி குளிக்கும் வசதியுடன் அமைக்கவும் வசதி செய்ய ஆய்வு செய்யப்பட்டுள்ளது. துறை செயலர் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் கலந்துகொண்டு இதற்கான திட்ட வரைவுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, பேருராட்சிகளின் இணை இயக்குநர் திரு.மலைமான் திருமுடிக்காரி, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் திரு.மணிமோகன், கண்காணிப்பு பொறியாளர் திரு.குணசேகரன், பேருராட்சிகள் துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.அன்பழகன், பேருராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் திரு.குற்றாலிங்கம், வட்டாட்சியர் திரு.முருகேசன், முக்கிய பிரமுகர்கள் திரு.எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, பேருராட்சிகள் செயற்பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.செந்தூர்பாண்டியன், திருமதி.லதாஸ்டான்லின், பேருராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.வாசுதேவன், திருச்செந்தூர் செயல் அலுவலர் திரு.ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...