முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

-----------------------

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஊராட்சி பகுதியில் வளர்;ச்சி திட்ட பணிகள் மற்றும் மரம் வளர்ப்பு தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் இன்று (12.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை விரைவாக மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை ஏழை, எளிய மக்களுக்கு சரியாக சென்று சேரவில்லை எனவே ஏழை, எளிய மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என பல ஊராட்சித்தலைவர்கள் இங்கு தெரிவித்தார்கள். நிச்சயமாக தலைவர் தளபதி அவர்களின் ஆட்சியில் தகுதியான அனைவருக்கும் நிச்சயமாக முதியோர் உதவித்தொகை பெற்று தரப்படும்.  மகளிர் ஊராட்சி தலைவிகள் இக்கூட்டத்திற்கு குறைவாக வந்துள்ளனர். இதுபோன்ற கூட்டங்களுக்கு கண்டிப்பாக அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற வாய்;புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பல்வேறு ஊராட்சிகளில் பணம் இல்லாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஊராட்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு நமது பிள்ளைகளை பாதுகாக்க, படிக்க வைக்க, அவர்களின் எதிர்காலத்திற்கு சொத்து சேர்ப்பதை போல நமது சமுதாயத்தை பாதுகாக்க நமது எதிர்கால சந்தியினரின்  நலனை பாதுகாக்க மரம் நடும் திட்டத்தினை அனைவரும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மரங்கள் இல்லையெனில் மழை இல்லை. தேனிக்கள் இல்லையெனில் பூ காய்கள் இல்லை. அதைப்போல நீங்கள் வைக்கும் மரங்கள் உங்களது எதிர்காலத்தை காக்கும். வேப்பமரங்கள் ஊராட்சிக்கு அதிக வருமானம் தரும் மரம் என்பதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இங்கு அனுபவரீதியாக எடுத்து சொன்னார். வேப்பமரம் இயற்கை விவசாயத்திற்கு பெரும் தேவையான உள்ளது. ரசாயண உரங்கள் மூலம் பாழ்பட்டுள்ள மண்ணை இயற்கை உரங்களின் மூலம் வளப்படுத்த வேண்டும். எனவே ஊராட்சி தலைவர்கள் தங்களது ஊராட்சி பகுதியில் உள்ள இடங்களில் மரங்களை வளர்த்து ஊராட்சியின் வருவாயை பெருக்கிட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் ஆட்சியில் முழுமையாக செய்து தருவோம் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மரங்களை தனி ஒருவராக இருந்து வளர்த்த திரு.தங்கமாரியப்பன் அவர்களை பாராட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், முக்கிய பிரமுகர் திரு.ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழு தலைவர் திரு.ரமேஷ், துணைத்தலைவர் திரு.காசிவிஸ்வநாதன், வட்டாட்சியர் திரு.ரகுபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 


.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...