முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை


  நான்  கொரோனா  பேசுகிறேன்....



எனது
பிறப்பினை தேடித் தேடி
உனது
இறப்பினை அடையும் 
ஆறறிவு மனிதா
நான்
கொரோனா பேசுகிறேன்
கேள் !

வாழும் உடல்  தேடி
அலையும் உயிர்க் கொல்லி
நான் !

மனித உடலில்
எனை பரப்பும் மாயசக்தி
நான் !

உனை நாடாதிருக்க 
நீ  கூடாதிரு
உனை கொல்லாதிருக்க
கூடி நில்லாதிரு

உயிரைக்  கொல்வது நோக்கமல்ல
உடலெங்கும் பரவி
வாழ்வதே ஏக்கம்  !

எனை ஏற்கும் சக்தியிருந்தால்
அந்த  சக்தி  பெறும்
வழி தெரிந்தால்
நீ
வாழ்வது நிச்சயம் 
நான்
வீழ்வது சத்தியம் .....

புத்தனவன்
போதனைகள் புதைத்து  விட்டாய்
சித்தர்களின்
சிந்தனைகள்  சிதறி விட்டாய்

செத்தவர்கள் கண்டு
பதறும் நீ
இப்பொழுதாவாது
புதைத்ததை தோண்டியெடு
சிதறியதை கூட்டி அள்ளு

பாட்டி சொன்ன வைத்தியம் 
பாட்டியோடு போவதற்கல்ல
என்னோடு
போட்டி  போடுவதற்கே

உன்
உடலில்  வாழப்போவது
நீயா  இல்லை
நானா ?

வீட்டிலிரு
விலகியிரு நீ
விளைத்த தானியம் மட்டுமே 
விழுங்கியிரு

உடலால்  தனித்திரு
உள்ளத்தால் கூடியிரு

ஆதிக்குடி தமிழா
மண்ணை நேசி
உன்
மண்ணில்  விளைந்ததெல்லாம்
ருசி
புசி

உப்பும் மஞ்சளும் போதும்
எனை விரட்ட
சிறு கிராம்பு போதும்
எனைக் கிள்ளி யெறிய

காற்றில் பரவுபவனல்ல
நான் 
கைகளினால் பரவுபவன்
உனது
கண் மூக்கு  வாய்
எனது வாரவேற்பு வளைவுகள் 

புகை உனக்கு  பகை
எனக்கு  உன்னுள் புகும்
கடவுச் சீட்டு 

மது
உற்சாக பானம் 
உனக்கும் எனக்கும்
நீ மாள
நான் வாழ

கழுவு
கண் மூக்கு வாய்
தொடும் கைகளை
கழுவு
அடிக்கடி  கழுவுவதால்
அழுவதை தவிர்க்கலாம் 


கூட்டத்தை  தடுத்து
எனது
நாட்டத்தை நொறுக்கு

எனக்கும் ஆசைதான்
நீ வாழ  -  உன்னுள்
நான் வாழ

என்னுயிர் பெருக பெருக
உன்னுயிர் சிறுக சிறுக
மாண்டு  போகிறாய் மனிதா

தொட்டால் பூ மலர்ந்த
காதல் தேசத்தில் 
தொட்டதால் நான் வளர்ந்தேன்

தொட்டுவிட தொட்டுவிட
தொடர்வேன்
பட்டுவிட பட்டுவிட
படர்வேன் - பாவம்
மனிதர்கள் 

இயற்கையில் நானும் 
உன்னைப்  போல் ஒருவன் 
இயற்கையை நேசி
இயற்யோடு பேசி
இயற்கையே எனை
கொல்லும்படி யோசி
நீ

அழுவதை நிறுத்த
கழுவுவதை நிறுத்தாதே
கவனமாய் நில்லு
கொரோனா
எனைக் கொல்லு!

தூத்துக்குடி  ஆ. மாரிமுத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...