முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மாட் சிட்டி. பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில்  ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


----------------------------

   தூத்துக்குடி மாநகராட்சியில்  ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு இன்று (24.07.2021) ஆய்வு செய்தார். மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


    தூத்துக்குடி  மாநகராட்சி மீளவட்டான் பகுதியில் 132 ஏக்கர் பரப்பளவில் உள்ள சி.வ.குளம் ரூ.11.50 கோடி மதிப்பிட்டில் தூர்வாறி, ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தப்படும் பணிகள் மற்றும் வரத்து கால்வாய்கள் காங்கிரிட் கால்வாய்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் ரூ.7.69 கோடி மதிப்பிட்டில் ஸ்மாட் ரோடு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்கள். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் ரூ.53.40 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் அங்கு 27 வழித்தடங்களில் பேருந்துகள் செல்லும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படுவதையும், தரைத்தளம் முழுவதும் பேருந்து பயணிகளுக்கும், மற்ற 4 தளங்களில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருவதையும், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ளநீர் வடிகால் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி.வ.குளம் தூர்வாறப்பட்டு அங்கு வெள்ள நீர் தேக்கும் வகையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மழைக்காலங்களில் நகருக்குள் வெள்ளம் வராமல் குளத்தில் தேக்கப்படும். தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இன்னும் 2, 3 மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும். கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும் பகுதிகளும் இன்று ஆய்வு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. ஸ்மாட் சிட்டி பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்காமல் இருந்தது. தற்போது அதனை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்மாட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் அருகில் உள்ள போக்குவரத்து கழக இடம் அனுமதி பெறுவதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் திரு.உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன்பெரியசாமி, திரு.ஆனந்தசேகரன், திரு.ராமஜெயம், திரு.ஜெகன், திரு.அருணாசலம், மாநகராட்சி பொறியாளர் திரு.சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், நகர்நல அலுவலர் மரு.வித்யா, வட்டாட்சியர் திரு.ஜஸ்டின் மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்