முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

 


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் துவக்கி வைத்தார்.

---------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் கலந்துகொண்டு, ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கூறியதன் அடிப்படையில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் பயிற்சியினை தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதி சுய உதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நாபர்டு வங்கியானது ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும்.  ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியானது ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை 15 நாட்கள் மேல ஆத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 30 பெண்கள் கலந்துகொண்டு பயனடைய இருக்கின்றார்கள்.                                                                                                                                                                                                     


 தூத்துக்குடி மாவட்டத்தில்தான் முதன்முறையாக ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் அஸ்சாம் மாநிலத்தில் இத்திட்டம் உள்ளது.  இந்த பயிற்சியானது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த பயிற்சி மூலம் ஆகாய தாமரையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதனை விற்றுக்கொடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும். மதிப்பு கூட்டப்பட்ட பொருளை நல்ல விலைக்கு விற்று உங்களுக்கு வருமானம் பெறுவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  ஆகாய தாமரையின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதன் மூலம் தெற்கு ஆத்தூரில் ஆகாய தாமரை இல்லாத குளமாக மாறும். இதன் மூலம் மகளிர்கள் தங்களது வருமானத்தை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.         

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திரு.பிச்சை, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திருமதி.சிவகாமி, சிப்போ நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.பழனிவேல், தூத்துக்குடி நாபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.சுரேஷ்ராமலிங்கம், திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகேசன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முதன்மை வங்கி மேலாளர் திரு.துரைராஜ், ஸ்டேட் பேங்க் முதன்மை மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், கனரா பேங்க உதவி பொது மேலாளர் திரு.சின.எஸ்.தேவ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணை பொது மேலாளர் திரு.மணிமாறன், தமிழக அரசு புத்தாக்க பயிற்சி திட்டம் திட்ட அலுவலர் திருமதி.முத்தமிழ்செல்வி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...