கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்




 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் 

---------------------------

 தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.





 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது


. நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல் பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோவில்பட்டி மற்ற மாவட்டத்திற்கு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயை விரும்பி வாங்குவார்கள். கோவில்பட்டியில் தொழில் முனைவோர்கள் அதிகமாக உள்ளனர். கோவில்பட்டி கடலைமிட்டாக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது.


 இந்த புவிசார் குறியீடு மூலம் சர்வதேச அளவில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மார்க்கெட்டிங் பெருமளவில் கிடைக்கும். கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் நீண்ட காலத்துக்கு நல்ல தரத்துடன் அதிக ஏற்றுமதி திறனை கொண்டுள்ளது. எந்த ஒரு உணவு பொருளும் வாடிக்கையாளரை சென்றடையும் வரை அதன் தரம் சுவை மாறாமல் உள்ளபடியே பெறுவதற்கு பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் தரப்படும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


 இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாரயணன், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் சென்னை மண்டல துணை இயக்குநர் திரு.பொன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.சொர்ணலதா, எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் திருமதி.ஜெரினா பப்பி, வட்டாட்சியர் திருமதி.அமுதா, கடலை மிட்டாய் தாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்