முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாம்




 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் 

---------------------------

 தூத்துக்கு மாவட்டம் கோவில்பட்டி எல்.ஜி செல்வ மஹாலில் இந்திய பேக்கேஜிங் நிறுவனம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து நடத்திய கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பயிற்சி முகாம் கையேட்டினை வெளிட்டார்கள்.





 மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்.இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 5 மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தை மதிப்பில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக புதிய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பேக்கேஜிங் உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு பயிற்சி வகுப்பு இன்று துவக்கி வைக்கப்படுகிறது


. நமது தூத்துக்குடி மாவட்டத்தில்தான்முதல் பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் நடைபெறுகிறது. இதன் மூலம் கோவில்பட்டி மற்ற மாவட்டத்திற்கு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. கோவில்பட்டி கடலைமிட்டாயை விரும்பி வாங்குவார்கள். கோவில்பட்டியில் தொழில் முனைவோர்கள் அதிகமாக உள்ளனர். கோவில்பட்டி கடலைமிட்டாக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது.


 இந்த புவிசார் குறியீடு மூலம் சர்வதேச அளவில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மார்க்கெட்டிங் பெருமளவில் கிடைக்கும். கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் நீண்ட காலத்துக்கு நல்ல தரத்துடன் அதிக ஏற்றுமதி திறனை கொண்டுள்ளது. எந்த ஒரு உணவு பொருளும் வாடிக்கையாளரை சென்றடையும் வரை அதன் தரம் சுவை மாறாமல் உள்ளபடியே பெறுவதற்கு பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் தரப்படும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


 இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாரயணன், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் பேக்கேஜிங் சென்னை மண்டல துணை இயக்குநர் திரு.பொன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.சொர்ணலதா, எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் திருமதி.ஜெரினா பப்பி, வட்டாட்சியர் திருமதி.அமுதா, கடலை மிட்டாய் தாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...